இந்தியா
மாநில கல்விக் கொள்கை 2025ஐ வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்

பள்ளிக்கல்விக்காக தனித்துவமான மாநில கல்விக் கொள்கை 2025ஐ வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். நடப்பாண்டு முதல் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அணைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.. இரு மொழிக் கொள்கையே நம் உறுதியான கொள்கை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மாநிலக் கல்விக் கொள்கை வகுத்திட நீதியரசர் முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட ஆய்வுக்குழு 2022ல் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக வேந்தர்கள், கல்வியாளர்கள், மொழி வல்லுநர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் பெறப்பட்டன. தமிழ்நாட்டின் கல்வி உரிமையை சிதைக்கத் துடிக்கிறது ஒன்றிய அரசு. குலக்கல்வி முறையை கொண்டுவர ஒன்றிய அரசு செய்யும் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். எதிர்காலத்திற்கு தேவையான முன்னோடி கருத்துக்களைக் கொண்டு மாநில கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது என அமைச்சர் தெரிவித்தார்.













