தமிழ்நாடு
கேப்டன் விஜயகாந்த் கால்விரல்கள் அகற்றப்பட்டதா? அதிர்ச்சி தகவல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கால்விரல்கள் அகற்ற பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து தேமுதிக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது
நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனையை ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவு பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.