Connect with us

இந்தியா

ரூ.295ல் ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டானியா நிறுவனம்.. இன்று ஒரு டிரில்லியன் மதிப்பு.. வளர்ந்த கதை!

Published

on

வெறும் ரூ.295 முதலீட்டில் ஆரம்பித்த பிரிட்டானியா நிறுவனம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அதாவது ஒரு டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது.

கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1892 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் ரூ.295 முதலீடு மட்டுமே வைத்து பிரிட்டானியா நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

1892 ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் 295 ரூபாய் மட்டுமே வைத்து, பிரிட்டிஷ் தொழிலதிபர்கள் குழுவொன்று பிரிட்டானிய நிறுவனத்தை உருவாக்கியது. இப்போது, 130 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய FMCG நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஆரம்பத்தில், மத்திய கொல்கத்தாவில் ஒரு சிறிய வீட்டில் பிஸ்கட் தயாரிக்கப்பட்டது. பின்னர், இந்த நிறுவனம் V.S. பிரதர்ஸ்” என்ற பெயரில் இயங்கியது. பின்னர் 1918ஆம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த ஹோம்ஸ் என்ற ஆங்கிலேய தொழிலதிபர் பங்குதாரராக எடுத்துக் கொள்ளப்பட்டு, தி பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி லிமிடெட் (பிபிசிஓ) என தொடங்கப்பட்டது. மும்பை தொழிற்சாலை 1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) பிஸ்கட்டுகளுக்கு அதிக தேவை இருந்ததால், இது பிரித்தானியா பிஸ்கெட் விற்பனை அதிகமாகியது. ஏனெனில் அது பிரிட்டிஷ் இராணுவத்திற்கு பிஸ்கட்களை வழங்கியது. பின்னர், நிறுவனத்தின் பெயர் 1979 இல் தற்போதைய “பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்” என மாற்றப்பட்டது.

1982 ஆம் ஆண்டில், அமெரிக்க நிறுவனமான Nabisco Brands, Inc. பீக் ஃப்ரீன்ஸின் தாய் நிறுவனத்தை கையகப்படுத்தியது. அதன்பின்னர் 1997ஆம் ஆண்டில் பிரிட்டானியாவின் பால் பொருட்கள் உற்பத்தியைத் தொடங்கப்பட்டது. வழிவகுத்தது. மேலும் நாடு முழுவதும் பல உற்பத்தி ஆலைகளைத் தொடங்கப்பட்டது. பிரிட்டானியாவின் பிஸ்கட்களின் பிற பிராண்ட் பெயர்களில் 50-50, நியூட்ரிச்சாய்ஸ், குட் டே, பியூர் மேஜிக் மற்றும் மில்க் பிகிஸ், போர்பன், நைஸ் டைம் மற்றும் லிட்டில் ஹார்ட்ஸ் ஆகியவை அடங்கும்.

தற்போது, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜ்நீத் கோஹ்லியும், நிர்வாக துணைத் தலைவர் & MD ஆக வருண் பெர்ரியும் தலைமை வகிக்கின்றனர். நவம்பர் 2022 ஆம் ஆண்டு வலுவான காலாண்டு முடிவுகளின் காரணமாக பங்கு விலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டன. இந்த உயர்வு காரணமாக பிரிட்டானியா இன்று ரூ. 1 டிரில்லியன் மதிப்புள்ள ஒரு நிறுவனமாக உள்ளது. பிரிட்டானியாவின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.06 டிரில்லியன் ஆகும்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?