டிவி
Bigg Boss 4 – இந்த வாரம் வெளியேறுகிறாரா ரம்யா? – கொதிப்பில் ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் முடிய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. இதனால் வரும் வாரங்களில் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பிக் பாஸ் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்ற நடிகை ரம்யா பாண்டியன், இந்த வாரம் வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதற்கு அவர் நடிகர் ஆரியுடன் மோதுவதுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படியான சூழலில் போட்டியாளர்களுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று, அவர்களுக்கு உற்சாகம் ஊட்டி வருகிறார்கள். அந்த வகையில் இன்று நடிகை ரம்யா பாண்டியனின் தாய் மற்றும் தம்பி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இதில் ரம்யாவின் தம்பி, ‘இந்த வாரம் நீ எவிக்ட் ஆகி வெளியேறினால் அதற்கு காரணம் நீ இல்லை’ என்று ரம்யாவிடம் கூறுகிறார். அதற்கு அவர், ‘அப்படியென்றால் வெளியேற வாய்ப்புள்ளதா?’ எனக் கேட்கிறார். இந்த செய்தியால் ரம்யாவின் ரசிகர்கள் மனமுடைந்துள்ளார்கள். எப்படியும் இந்த வார இறுதியில் வெடி இருக்கிறது.