வணிகம்
சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி!
சென்னையில் நாளை காலை முதல் பேக்கரி கடைகள் திறக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மளிகைக் கடைகள் போன்று, காலை 6 மணி முதல் 1 மணி வரை பொருட்களை விற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளான பிஸ்கேட், பிரெட் போன்றவை கிடைக்கவில்லை என்று தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து, சென்னை மாநகராட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தமிழகத்தின் பிற நகரங்கள் மற்றும் ஊர்களில் பேக்கரிகள் திறக்கலாமா என்று தெரியவில்லை.