Connect with us

தமிழ்நாடு

மீண்டும் மக்கள் நல பணியாளர்களுக்கு வேலை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்!

Published

on

மக்கள் நலப்பணியாளர்கள் வேலையை இழந்த 13 ஆயிரம் பேர்களுக்கு மீண்டும் வேலை வழங்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது .

கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் 13 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் வேலையை அன்றைய முதல்வர் கருணாநிதி வழங்கினார். அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக, மக்கள் நல பணியாளர்களை வேலை நீக்கம் செய்தது. அதன்பின் திமுக அதிமுக ஆட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தபோது மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்படுவதும் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவதுமக இருந்தன.

கடைசியாக 2011ம் ஆண்டில் மக்கள் நலப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்ட நிலையில் மக்கள் நலப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, ‘மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கொள்கை முடிவை எடுத்திருப்பதாகவும் எனவே இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் 4 வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தது. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் மக்கள் நல பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?