தமிழ்நாடு
முடிந்தது ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: அறிக்கை சமர்ப்பிப்பது எப்போது?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த விசாரணை முடிந்து விட்டதாகவும் விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின்போது ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது .
இந்த ஆணையம் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் இடையில் சிலமாதங்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக விசாரணை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து சசிகலா உள்பட பலரிடம் விசாரணை செய்யப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை முழுமையாக முடிந்து விட்டதாகவும் ஜூன் 24ம் தேதிக்குள் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாளை முதல் விசாரணை அறிக்கை தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த அறிக்கையில் என்ன இருக்கும் என்பதை அறிய தமிழகமே காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.