சினிமா செய்திகள்
‘அண்ணாத்த’ விதிமுறைகளால் பிரியும் நயன்- விக்கி ஜோடி!

’அண்ணாத்த’ படப்பிடிப்பு விதிமுறைகளுக்காக நடிகை நயன்தாராவும் அவரது காதலருமான விக்னேஷ் சிவனும் ஒரே ஊரில் பிரிந்து இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாம்.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் உள்ள ராமோஜி படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினி உடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய நாயகியர் நடிக்கின்றனர். கொரோனா விதிமுறைகளையும் தாண்டி ரஜினிகாந்த்-க்கு வழங்கப்படும் ‘பயோ பபிள்’ விதிமுறையால் படப்பிடிப்பு முடியும் வரையிலான 45 நாட்களுக்கு அத்தனை நடிகர்களும், பணியாளர்களும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
நயன்தாராவின் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்துக்காக ஹைதராபாத்தில்தான் படப்பிடிப்பில் உள்ளார். காதலர்கள் ஒரே ஊரில் ஒரே தளத்தில் இருந்தாலும் ‘பயோ பபிள்’ விதிமுறையின் காரணமாக இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் காதல் ஜோடிகள் வருத்தத்தில் உள்ளதாக சினிமா வட்டாரத்தினுள் கிசுகிசுக்கப்படுகிறது.


















