Connect with us

தமிழ்நாடு

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் அம்மாவுக்கு வீடு கட்டி கொடுத்த தொழிலதிபர்!

Published

on

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் கமலா அம்மாளுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது .

தமிழகத்தைச் சேர்ந்த கமலாம்மாள் என்பவர் இட்லி அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி சட்னி சாம்பார் விற்பனை செய்து வருகிறார். இதனைக் கேள்விப்பட்ட தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இட்லி அம்மாவுக்கு தன்னால் செய்த உதவியை செய்ய போகிறேன் என டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார்.

கமலாம்மாள் விறகு அடுப்பை பயன்படுத்துவதை கேள்விப்பட்ட அவர் உடனடியாக கேஸ் இணைப்பு ஒன்றும் கேஸ் அடுப்பு ஒன்றும் தன்னுடைய சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார். மேலும் அவரும் அவருடைய வீடு சரியாக இல்லை என்பதை தெரிந்து கொண்ட ஆனந்த் மஹிந்திரா அவருக்கு வீடு கட்டிக் கொடுக்கவும் முடிவு செய்தார்.

கமலாம்மாள் சொந்த ஊரில் நிலம் வாங்கி அதில் வீடு கட்டும் பணியும் நடந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தில் அந்த வீட்டை கமலாம்மாளிடம் ஒப்படைத்து உள்ளார். இது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, ‘எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர் சந்தோசம் கொடுக்கும் முயற்சியை விட வேறு பெரிய சந்தோஷம் எதுவுமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?