இந்தியா
அகமதாபாத் விமான விபத்து: டிஏன்ஏ பரிசோதனையால் அடையாளமாகிய 87 பேர் — 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

அகமதாபாத்: ஜூன் 12 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 47 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநில அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா ஏஐ-171 விமானம் பறந்த சில நொடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, ஒரு பயணியை தவிர விமானத்தில் இருந்த மொத்தமாக 278 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண டிஏன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில்இதுவரை 92 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 47 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அகமதாபாத் அரசு மருத்துவமனையின் கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ரஜ்னீஷ் படேல் கூறியதன்படி, “விமான விபத்து நடந்த பகுதியில் இருந்து மீகப்பட்ட உடல்கள் வியாழக்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்பு அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மொத்தமாக 92 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் கேடா, அகமதாபாத், கோட்டா, மெஹசானா, பரூச், வடோடரா, ஆரவல்லி, ஆனந்த், ஜூனாகத், பாவ்னகர், அம்ரேலி, மஹிசாகர் மற்றும் பாவ்னகர் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 47 பேரின் உடல்கள் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன”அவர் கூறினார்.
உடல்களை அடையாளம் காணும் பணிக்காக உறவினர்களிடம் இருந்து டிஏன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் உறவினர்களின் மொபைல் எண்கள் பதிவு செய்யப்பட்டு, அடையாளமாகும் உடல்களை ஒப்படைத்துவிட்டனர்.
மருமனையின் அதிகாரப்பூர்வ எண்களிலிருந்து மட்டுமே உறவினர்களுக்கு அழைப்புகள் வருவதாக நிர்வாகம் எச்சரித்துள்ளது. டிஏன்ஏ பொருந்தும் பட்சத்தில் உறவினர்களை தொடர்பு கொண்டு உடல்களை ஒப்படைத்துக் கொள்ள வர வேண்டிய நேரத்தை தெரிவிக்கும் என அதிகாரிகள் கூறினர்.
மருவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ எண்கள்: 9429915911, 9429916096, 9429916118, 9429916378, 9429916608, 9429916622, 9429916682, 9429916758, 9429916771, 9429916875.
விபத்தில் இறந்தவர்களின் உடல்களை எளிதில் மற்றும் சுமுகமாக ஒப்படைக்கும் பணியில் மூத்த அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வேலை செய்து வருகின்றனர்.















