தமிழ்நாடு
130 வருட வானிலை வரலாற்றில் முதல்முறையாக: சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை
130 வருட வானிலை வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தை காற்றழுத்த தாழ்வு மார்ச் மாதத்தில் நெருங்குகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக ஏற்கனவே வெளிவந்த தகவலை பார்த்தோம். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது கடந்த 130 வருட வானிலை வரலாற்றில் மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டை நெருங்கும் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதுதான் என கூறியுள்ளார்.
கடந்த 1938ம் ஆண்டு இலங்கையையும் 1994 ஆம் ஆண்டு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மார்ச்சில் நெருங்கியது என்றும் அதனை அடுத்து தற்போது தான் மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது என்றும் ஒரு சில இடங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.