Connect with us

உலகம்

குழந்தைகளாவது தப்பிக்கட்டும்: அமெரிக்க வீரர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கும் தாய்மார்கள்!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற முடியாத பொதுமக்கள் தங்கள் குழந்தைகளாவது தப்பிக்கட்டும் என குழந்தைகளை அமெரிக்க வீரர்களிடம் கொடுத்து வரும் காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அந்நாட்டில் இருந்து வெளியேற ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொதுமக்கள் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் விமானநிலையத்தை தாலிபான்கள் கொண்டுவந்துள்ளனர். எனவே நாட்டை விட்டு வெளியேற முடியாமல் பல பொது பொது மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க இராணுவம் தற்போது படிப்படியாக வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க ராணுவ வீரர்களிடம் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கொடுக்கும் காட்சியில் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

தங்கள் குழந்தைகளாவது அமெரிக்காவில் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று அவர்கள் தங்கள் குழந்தைகளை கொடுத்து வருகின்றனர். பின்னாளில் அமெரிக்கா சென்றால் அவர்கள் அந்த வீரர்களிடம் தங்கள் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அவர்கள் கொடுத்து வருவதாக தெரிகிறது.

இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலைமையை உணர்ந்து கொள்ள இந்த ஒரு வீடியோ போதும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க விமானப்படை விமானத்தில் உள்ள ஒரு குழந்தையை குளிரால் நடுங்குவதை பார்த்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய யூனிபார்மை கழட்டி அந்த குழந்தைக்கு போர்த்திவிட்டு காட்சியின் புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?