தமிழ்நாடு
காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரிணிக்கு ரோஜாப்பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ!
இன்றைய சட்டமன்ற கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு திடீரென அதிமுக எம்எல்ஏ ஒருவர் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவிக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று முதல் சட்டப் பேரவையில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி இன்று சட்டமன்றத்தில் பேசியபோது அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடக் கூடாது என்றும் அந்த திட்டத்தை தொடர வேண்டும் என்றும் இதனால் ஏராளமான பெண்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் மகிழ்ச்சி அடைந்து மேஜைகளை தட்டினார்கள். இந்த நிலையில் திடீரென பாப்பாரப்பட்டி அதிமுக எம் எல் ஏ கோவிந்தசாமி ரோஜா பூக்களை எடுத்துக் கொண்டு விஜயதாரிணியிடம் சென்று வாழ்த்து கூறினார். விஜயதாரணி மகிழ்ச்சியோடு அதனை பெற்று கொண்டார்.
அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை இரண்டு கட்சிகளும் எதிரெதிர் கூட்டணியில் இருந்தாலும், அரசியல் நாகரீகம் கருதி அதிமுக எம்.எல்.ஏ வாழ்த்து தெரிவித்ததும், அதை திமுக எம்.எல்.ஏக்களும் ரசித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.