Connect with us

தமிழ்நாடு

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி கைது!

Published

on

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இந்த தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்றும் இந்த தேர்தலின் பாதுகாப்பிற்கு தமிழக போலீசாருக்கு பதிலாக மத்தியிலிருந்து துணை ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து எஸ் பி வேலுமணி இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலரும் கலந்துகொண்டனர் .

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ் பி வேலுமணி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களிடம் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் எஸ் பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

இதுகுறித்து எஸ் பி வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவுக்கு ஆதரவாக காவல்துறையினரே பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் காவல்துறையினரே விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க உதவியாக இருப்பதாகவும், குண்டர்கள் மற்றும் ரவுடிகளை சிறையிலிருந்து விடுதலை செய்து கோவையில் இறக்கி உள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?