இந்தியா
படிக்கும்போதே வேலை: கல்லூரி மாணவியின் சம்பளம் ரூ.1.60 கோடி!
பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே 1.60 கோடி ரூபாய் சம்பளத்துக்கு வேலை கிடைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் படிப்பை அதிதி திவாரி என்ற மாணவி படித்து வருகிறார். இவருடைய தந்தை டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும் தாயார் அரசுப்பள்ளி ஆசிரியராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் அதிதி திவாரி படிக்கும் கல்லூரியில் நேர்காணல் நடைபெற்ற நிலையில் அதில் அவர் 1.60 கோடி ரூபாய் ஊதியத்தில் வேலை பெற்றார். கல்லூரி இறுதி ஆண்டு முடிந்ததும் அவர் பணியில் சேர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளில் மிக அதிக ஊதியத்தில் வேலையில் சேரும் கல்லூரி மாணவி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர் எந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர உள்ளார் என்பது குறித்த தகவலை கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவில்லை.