இந்தியா
அக்னிபத் திட்டத்தில் சேர ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம்: ஏர் மார்ஷல்

ஒருபக்கம் அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஜூன் 24ஆம் தேதி முதல் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளைஞர்களுக்கான ராணுவத்தில் சேரும் வாய்ப்பு அளிப்பது அக்னிபத் திட்டம் என்பதும் இந்த திட்டத்தின் சேருபவர்கள் நான்கு ஆண்டு ராணுவத்தில் பணி புரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதில் ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேரும் ஒருவருக்கு மாதம் ஒருவருக்கு 40,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் 22 வயதில் வெளியே வரும்போது அவருடைய மொத்த சம்பளம் 20 லட்ச ரூபாயாக இருக்கும் என்றும் அந்த பணத்தில் அவர் தொழிலில் முதலீடு பெரிய தொழிலதிபர் ஆகலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அக்னிபத் திட்டத்தில் சேர வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தேர்வு நடைபெறும் ஏர் மார்ஷல் எஸ்.கே. ஜா அறிவித்துள்ளார். மேலும் முதல் அக்னிபத் வீரர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மூத்த ராணுவ அதிகாரி அனில்புரி கூறியபோது முப்படைகளில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அக்னிபத் திட்டம் என்றும், அக்னிபத் ரர்களுக்கு ராணுவ வீரருக்கு இணையாக அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என்றும் அக்னி வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தால் ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டால் ராணுவத்தில் சேர முடியாது என்றும் முதல் தகவல் அறிக்கையில் பெயர் இடம் பெற்றிருந்தால் ராணுவத்தில் சேர முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
























