தமிழ்நாடு
உயிரிழந்த திருச்சி எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு!

இன்று காலை திருச்சியை சேர்ந்த எஸ்ஐ பூமிநாதன் அவர்கள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்யப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஐஎஸ்ஐ பூமிநாதன் அவர்களை கொலை செய்தவர்களை கண்டு பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாளில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் திருச்சி எஸ்ஐ கொலை செய்யப்பட்டது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இதற்காக உடனடியாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கொலை செய்யப்பட்ட பூமிநாதன் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்யப்படும் என்றும் அவருடைய குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.






















