இந்தியா
அந்த 2 பேய்களும் என்னை கொன்னுடும்.. நடவடிக்கை எடுங்க!… போலீசாரிம் வாலிபர் பகீர் புகார்…

உலகில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எப்படி விவாதமோ அல்லது அதேபோல்தான் ஆவி, பிசாசு, பேய் இதுவெல்லாம். சினிமாவில் பேய்களை பல தோற்றத்தில் காட்டுகிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் யாரும் அப்படி பேயை இதுவரை பார்த்திருக்கவில்லை. ஆனாலும், அம்மானுஷ்யமான தங்கள் வாழ்வில் நடந்ததாக பலரும் கூறி வருவதை மறுக்க முடியாது.
இந்நிலையில்தான் ஒரு வாலிபர் 2 பேய்கள் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் வசிப்பர் வர்ஷங்பாய் பாரியா(35). இவர் கடந்த 29ம் தேதி வேர்க்க விறுவிறுவெக்க அரங்குகள் காவல் நிலையத்திற்கு வந்தார். மிகவும் பதட்டமாக காணப்பட்ட அவரை போலீசார் ஆசுவாசப்படுத்தி அமர வைத்தனர். அதன்பின் கூறிய கதையே கேட்டு அவர்கள் ஆடிப்போயினர்.
கடந்த சில வாரங்களக பேய்கள் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், அதில் 2 பேய் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் அவர் பயந்து கொண்டே கூறியுள்ளார். இதைக்கேட்டு போலீசாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர் கூறியதை அவர்கள் நம்பவில்லை என்றாலும், புகாரை பெற்றுக்கொண்டு அவரை அனுப்பிவிட்டனர்.

மேலும், இதுபற்றி அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அப்போதுதான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அவர் புகார் அளித்தது தங்களுக்கு தெரியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதோடு, 10 நாட்களாக அவர் மருந்துகளை சாப்பிடவில்லை. அதனால்தான் இப்படி நடந்துகொண்டார் என அவரின் சகோதரர் மகேஷ் பாரியா போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து போலீசார் சென்றுள்ளனர்.
நல்ல கிளப்புறாங்கய்யா பீதிய!…















