தமிழ்நாடு
ஒரு காரால் வித்தியாசமான விபத்தில் சிக்கிய ஹைதராபாத் விமானம்!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே கார் ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்றுதான் இதுகுறித்த அதிகாரப்பூர்வ் தகவல் வெளியே சொல்லப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானம் ஹைதராபாத்தில் இருந்து கோவா நோக்கி புறப்பட தயாராகி உள்ளது. அப்போதுதான் குறுக்கே கார் வந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அந்த மர்ம காரில் வந்த மர்ம நபர் யார் என்று தெரியவில்லை. இதனால் யாருக்கும் காயமோ, வேறு எந்த அசம்பாவிதமோ ஏற்படவில்லை.


















