Connect with us

இந்தியா

12 நவீன ரோந்து படகுகள்.. ராணுவத்தின் அதிரடி திட்டம்.. இனி லடாக் எல்லையில் மாஸ் காட்டலாம்!

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லை பகுதியில் 6 மதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது.

Published

on

லடாக்: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரி உட்பட பெரிய நீர்நிலைகளின் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக 12 உயர் செயல்திறன் கொண்ட ரோந்து படகுகளை கொள்முதல் செய்ய இராணுவம் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லை பகுதியில் 6 மதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது சீன ராணுவம் அந்த பகுதியில் அத்துமீறலிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும் பாங்காங் ஏரியின் தென்கரைக்கு அருகே படைகளையும் நிலை நிறுத்தியுள்ளது. பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் கூட சீனா அந்த பகுதிகளில் இருந்து படைகளை பின்வாங்க மறுத்து வருகிறது. கடைசியாக நவம்பர் 6 ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே மேஜர் மட்டத்திலான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த வாரம் ராணுவ ஜெனரல் நரவனே கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரியை சுற்றியுள்ள உயரமான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த இராணுவத் தயார் நிலையையும் மதிப்பாய்வு செய்தார். பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை நிலவக்கூடிய கிழக்கு லடாக்கின் பல்வேறு மலைப்பகுதிகளில் கிட்டத்தட்ட 50,000 துருப்புக்கள் அதிக அளவில் போர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சீனாவும் இதற்கு சம எண்ணிக்கையிலான துருப்புக்களை நிலை நிறுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சீனா அந்த பகுதிகளில் தங்களிடம் இருக்கும் நவீன படகுகள், டிரோன் விமானங்கள் மூலம் கண்காணிப்பை தீவிரமாக செய்து வருகிறது. அதற்கு நிகராக இந்திய ராணுவத்திலும் நவீன படகுகளை கொண்டு பாங்காங் த்சோ உள்ளிட்ட பெரிய நீர்நிலைகளில் கண்காணிப்பை பலப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இதற்காக 12 உயர் செயல்திறன் கொண்ட ரோந்து படகுகளை கொள்முதல் செய்ய இந்திய இராணுவம் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவா மாநில அரசு நடத்தும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் என்கிற பொதுத்துறை நிறுவனத்திடம் 12 விரைவான ரோந்து படகுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிக உயரமான பகுதிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பகுதிகளில் கண்காணிப்பை மேம்படுத்தவும் மற்றும் ரோந்து செல்வதற்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மே மாதம் முதல் இந்த படகுகளை டெலிவரி செய்யும் பணி தொடங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு நிகராக பங்கோங் ஏரி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பிற நீர்நிலைகளை கண்காணிப்பதற்காக இந்த படகுகள் வாங்கப்படுகின்றன என்று ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம், உயர் செயல்திறன் கொண்ட சிறப்பு ரோந்து உபகரணங்களை வழங்குவதற்காக இந்திய ராணுவத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது என்றும், ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய சிறப்பு உபகரணங்கள் அதில் பொருத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். அதற்கான உபகரணங்கள் அனைத்தும் கோவாவில் இருக்கும் அந்த நிறுவனத்தின் உற்பத்தி மையத்திலேயே தயாரிக்கப்படும் என்றும், உலகிலேயே கோவா மற்றும் சில பகுதிகளில் மட்டுமே இதுபோன்ற உபகரணங்களை தயாரிக்கும் இடம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தவிக்கும் இந்திய மாலுமிகள் :

இதற்கிடையே சீன கடலில் இரண்டு கப்பல்களில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் கப்பல் இயக்குநர் ஜெனரலுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக கடந்தாண்டு பல நாட்கள் சீனா பிற நாட்டினர் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை விதித்திருந்தது. அந்த சமயங்களில் அங்கு சென்ற இந்திய சரக்கு கப்பல்களும் சீன துறைமுகங்களுக்கு அருகேயே நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்திய கப்பல்களுக்கு மட்டுமே இந்த தடை தொடருவதாகவும் இந்திய கப்பல்களுக்கு பிறகுசென்ற மற்ற நாட்டு கப்பல்கள் எல்லாம் சரக்குகளை இறக்கி விட்டு சென்றுவிட்டன என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, இந்திய மொத்த சரக்குக் கப்பல் எம்.வி.ஜாக் ஆனந்த் கடந்த ஆண்டு ஜூன் 13ம் தேதி முதல் சீனாவின் ஹெபேய் மாகாணத்தில் உள்ள ஜிங்டாங் துறைமுகத்திற்கு அருகே நங்கூரமிட்டு உள்ளது, அதில் 23 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளனர். அதே போல மற்றொரு சரக்கு கப்பலான எம்.வி. அனஸ்தேசியா, 16 இந்தியர்கள் உட்பட அதன் குழுவினருடன் செப்டம்பர் 20ம் தேதி முதல் சீனாவின் காஃபீடியன் துறைமுகத்திற்கு அருகே நங்கூரமிட்டு உள்ளனர் என்றார்.

இந்த இரண்டு கப்பல்களும் தங்கள் சரக்குகளை வெளியேற்றுவதற்காகக் காத்திருப்பதாகவும், நீண்ட கால தாமதத்தின் காரணமாக குழு உறுப்பினர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துக்கொண்டு இருப்பதாகவும் கூறினார். பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சீனாவின் பெய்ஜிங், ஹெபேய் மற்றும் தியான்ஜினில் உள்ள சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து இதுகுறித்து பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரமாக பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே சீனாவின் இந்த செயலுக்கு பதில் நடவடிக்கையாக இந்திய விமானங்களில் சீனர்கள் பறக்க தடை விதிக்கும் விதமாக மத்திய அரசு அணைத்து விமான நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டு உள்ளதாக ஒரு தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.06.2026

பர்சனல் ஃபினான்ஸ்11 மணி நேரங்கள் ago

தனியார் ஊழியர்களுக்கு ரூ.15,000 இலவச ஊக்கத்தொகை: மத்திய அரசின் PMVBRY திட்டம் பற்றி தெரியுமா?

தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜூன் 15 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றம்! வட்டி, அபராதம், எரிபொருள் கட்டணங்களில் புதிய விதிகள்

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஜூன் 16 முதல் செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட மழை!

வணிகம்22 மணி நேரங்கள் ago

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆர்பிஐ சூப்பர் திட்டம்! டாலர் சேமிப்புக்கு 7% வட்டி, வருமான வரி விலக்கும் உண்டு!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! தொழில், பணம், கல்வியில் பெரிய முன்னேற்றம்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வியாபார உலகின் ராணிகள்! தொழிலில் வெற்றி பெறும் பிறந்த தேதிகள் எவை?

செய்திகள்22 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு மாற்றியதால் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதா? பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா6 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வணிகம்7 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

வணிகம்6 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

வணிகம்7 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்.. வாட்ஸ்அப் சேவையும் தொடக்கம்!

வணிகம்5 நாட்கள் ago

ஜூன் 2026 பர்சனல் லோன் வட்டி விகிதங்கள்: எந்த வங்கியில் குறைந்த EMI? ரூ.5 லட்சம் கடனுக்கு முழு ஒப்பீடு!

Business Loans
வணிகம்6 நாட்கள் ago

கையில் கூடுதல் பணமா? கடனை அடைப்பதா அல்லது முதலீடு செய்வதா? சரியான முடிவெடுக்க 8 முக்கிய வழிகள்!

Translate »
Google launches gemini robotics ai.