தமிழ்நாடு
தங்கக் கடத்தலுக்கு உதவிய ஏர் இந்தியா ஊழியர்கள்!

துபாயில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்திய சம்பவத்தில் ஏர் இந்தியா ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக திருச்சிக்கு தங்கக்கட்டிகள் கடத்த உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உயர்அதிகாரிகளின் உத்தரவுபடி, தூத்துக்குடி மத்திய புலனாய்வு அதிகாரிகள் திருச்சி விரைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது எந்த பயணிகளிடமும் எதுவும் சிக்கவில்லை. பின்னர், ஏர் இந்தியா ஊழியர் மூலமாக தங்கக்கடத்தல் பரிமாற்றம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் உஷார் அடைந்தனர். விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான கார்கோ பிரிவில், கோபிநாத் (50) என்ற ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் கடத்தல் கும்பலிடம் தங்க கட்டிகள் அடங்கிய பையை கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த புலனாய்வு அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்தனர். இந்த சம்பவத்தில் துபாய் பயணி ஒருவருக்கும் தொடர்பு இருந்தது. அவரையும் சேர்த்து மொத்தம் 5 பேரை கைது செய்தனர். கடத்தல் கும்பல்களிடம் இருந்து 1.5 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.





















