வணிகம்
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் casing head condensate ஆகியவற்றுக்கான ராயல்டி (Royalty) விதிமுறைகள் மற்றும் கணக்கீட்டு முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், நிலப்பரப்பிலும் கடல்சார் பகுதிகளிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்க உள்ளன. இந்த மாற்றம் இந்தியாவின் upstream oil and gas sector வளர்ச்சிக்கு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் Hardeep Singh Puri தனது X பதிவில், “Oilfields (Regulation and Development) Act கீழ் ராயல்டி விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பது இந்தியாவின் upstream sector-க்கு புதிய வளர்ச்சி காலத்தை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ராயல்டி மாற்றம் என்றால் என்ன?
எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபடும் நிறுவனங்கள், அவர்கள் பெறும் வருமானத்தில் ஒரு பகுதியை அரசுக்கு ராயல்டி அல்லது வரியாக செலுத்த வேண்டும். இதற்கான விதிமுறைகள் இதுவரை பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் மாறுபட்டிருந்தன.
இப்போது மத்திய அரசு இந்த நடைமுறைகளை ஒரே மாதிரியாக மாற்றியுள்ளது. இதனால்:
- விதிமுறைகளில் தெளிவு கிடைக்கும்
- முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்
- வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும்
- எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி துறையில் வளர்ச்சி வேகமாகும்
புதிய மாற்றங்களால் கிடைக்கும் நன்மைகள்
1. முதலீடுகள் அதிகரிக்கும்
நிலையான மற்றும் எளிமையான வரி அமைப்பு காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய எண்ணெய் துறையில் அதிக ஆர்வம் காட்ட வாய்ப்பு உள்ளது.
2. உற்பத்தி அதிகரிக்கும்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு மற்றும் அகழ்வு பணிகள் வேகமாக நடைபெற வாய்ப்பு உருவாகும்.
3. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு வலுப்படும்
வெளிநாட்டு இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்த மாற்றம் உதவக்கூடும்.
4. தொழில் வளர்ச்சிக்கு ஆதரவு
Oil and Gas துறையில் புதிய திட்டங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் உருவாகும்.
“10 ஆண்டுகளாக செய்யப்பட்ட முயற்சியின் பலன்”
இந்த மாற்றம் குறித்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தை வேகப்படுத்த regulatory framework-ஐ நவீனப்படுத்தும் நோக்கில் கடந்த 10 ஆண்டுகளாக செய்யப்பட்ட முயற்சியின் முக்கிய முடிவாக இது அமைந்துள்ளது” என்றார்.
இந்த நடவடிக்கை மூலம் இந்தியா உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு முதலீட்டு சந்தையில் மேலும் வலுவான இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















