இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 30.01.2026

- இதுவரை பிறப்பு பதிவு செய்ய தவறியவர்கள் தமிழ்நாடு கொடுத்துள்ள சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி 30.09.2026 வரை பதிவ செய்து கொள்ளலாம்.
- பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு அவற்றை கச்சா எண்ணெயாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாக்டீரியாக்களை உருவாக்கி கழிவு மேலாண்மை மற்றும் எரிசக்தி துறையில் ஜெர்மனி ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
- திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.700 கோடி மதிப்பு நிலங்களை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வந்த போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்றிக்கொள்ள ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
- ஈரானின் அதிநவீன கடல்படை பீரங்கிகள் கடலில் இறங்கி வலம் வந்ததை பார்த்து இப்படி ஒரு கடல்படையா என உலக நாடுகள் அதிர்ச்சி.
- ஆப்கானிஸ்தானில் கணவர்கள் மற்றும் அடிமைகளை கையாளும் முதலாளிகள் பெண்களை காயங்கள் ஏற்படுத்தாமல் தண்டிக்க அனுமதி வழங்கி உள்ளது தாலிபான் அரசு. காயங்கள் உண்டானால் ஆண்களுக்கு 15 நாட்கள் சிறை. கணவர் அனுமதியின்றி பெண்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றால் 3 மாதங்கள் சிறை.
- தொழிற்சங்கங்களால் எத்தனையோ தொழில் சாலைகள் மூடப்பட்டுள்ளது. நாட்டின் தொழில் வளர்ச்சி முடங்குவதற்கு அவர்களே முக்கிய காரணம் – உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்.
- விருது நகரை மையமாகக் கொண்டு 3 ரிக்டர் அளவில் நேற்று பிற்பகலில் ஏற்பட்டது நில அதிர்வு
- இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.600 குறைந்து கிராம் ரூ.16200க்கும் சவரன் ரூ.129600க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.415க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.415000க்கும் விற்பனை ஆகிறது.
- இன்று மகாத்மா காந்தி நினைவு நாளை ஒட்டி தமிழ்நாடு முழுதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளில் தீண்டாமை உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

















