ஆன்மீகம்
புரட்டாசி சனி விரதம்: பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிப்பாட்டு முறைகள்!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் புரட்டாசி மாதத்தில் பலரும் விரதம் மேற்கொள்வது வழக்கமாகும். குறிப்பாக சனிக்கிழமைகளில் செய்யப்படும் விரதம் மிகுந்த புண்ணியத்தை தரும் என நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் விரதத்தை முழு பக்தியுடன் கடைப்பிடித்தால், அந்த ஆண்டின் முழுவதும் செல்வ வளமும் சுபீட்சமும் அதிகரிக்கும் என்ற ஐதீகம் உள்ளது.
🪔 புரட்டாசி விரதத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்
அசைவம் தவிர்த்தல்: புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.
தலுகை போடுதல்: ஒரு சனிக்கிழமையில், சிறப்பாக முதல் சனிக்கிழமையிலேயே தலுகை போடுவது நன்மை தரும். சிறிய சொம்பில் துளசி மாலை சுற்றி, வீடு வீடாக சென்று தலுகை எடுத்து வருவது வழக்கம். இது அகந்தையை நீக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
பூஜை மற்றும் நைவேதியம்:
தலுகையால் பெறப்படும் அரிசி, பணத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
வாழை இலையில் புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் போன்ற நைவேதியங்களை படைக்க வேண்டும்.
பெருமாளுக்கு வடைமாலை சாற்றுவது சிறப்பான வழிபாடு.
துளசி தீர்த்தம் கட்டாயமாக இருக்க வேண்டும். மாவிளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து பூஜை செய்ய வேண்டும்.
அனைவரும் “கோவிந்தா… கோவிந்தா…” எனும் நாமத்தை முழங்க வேண்டும்.
🙏 விரத விதிமுறைகள்
இந்த விரதத்தை பெண்கள் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரும் கடைப்பிடிக்கலாம்.
பூஜை நடைபெறும் வரை தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது சிறந்ததாகும்.
எமகண்டம் தொடங்குவதற்கு முன் பூஜையை முடிக்க வேண்டும்.
காக்கைக்கு இலையில் உணவு வைத்து, அது காக்கை எடுத்த பின்பு தான் வீட்டில் உள்ளவர்கள் உண்ணலாம்.
வசதி இருந்தால், 2 அல்லது 4 பேரை வீட்டிற்கு அழைத்து உணவு வழங்குவது புண்ணியமாகும்.
விரதம் முடிந்தவுடன், மாலை நேரத்தில் பெருமாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது அவசியம்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இவ்வாறு விரதம் இருந்து, பெருமாளை பிரார்த்தனை செய்தால் குடும்பத்தில் அமைதி, செல்வ வளம் மற்றும் ஆனந்தம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: சனி தோஷ நீக்கம், செல்வம், குடும்ப அமைதி பெறும் வழிபாடு!

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் ஆளுமை குணங்கள் – ஜோதிட ரகசியங்கள்!

புரட்டாசி 2025: முதல் நாளில் பெருமாளை வழிபட வீட்டில் வாங்க வேண்டிய 3 சிறப்பு பொருட்கள்!

வைகுண்ட ஏகாதசி 2025: சொர்க்க வாசல் திறப்பு நாளில் இந்த வழிபாடுகள் உங்கள் வாழ்வை மாற்றும்!

புரட்டாசி மாத பரிதாபங்கள் மற்றும் அதனை சரிசெய்வது எப்படி?

புரட்டாசி விரதம்: எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்? முழுமையான வழிமுறைகள்!
















