பங்கு சந்தை
மீண்டும் முதலீட்டாளர்களை கவரும் சுஸ்லான் எனர்ஜி – பங்கு விலை 13% ஏற்றம்!

சுஸ்லான் எனர்ஜி பங்குகள் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்வை சந்தித்து வருகின்றன. மார்ச் 2025-ம் ஆண்டின் காலாண்டு முடிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளதால், பங்குகள் ஒரே நாளில் 13.6% உயர்ந்தன. இந்த வளர்ச்சி, நிறுவனத்தின் சந்தை மதிப்பை மீண்டும் ரூ.1 லட்சம் கோடியை எட்டச் செய்தது.
2025ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், சுஸ்லான் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,181 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் ரூ.319 கோடியாக இருந்தது. வருவாயும் 73% உயர்வு கண்டுள்ளது.
இந்த வளர்ச்சி காரணமாக பங்கு விலை ரூ.71.46 வரை உயர்ந்தது. இது ஒரு நாளில் 9.23% உயர்வைக் காட்டுகிறது. கடந்த மாதத்தில் மட்டும் சுஸ்லான் பங்கு விலை 30% உயர்ந்துள்ளது. வருடத்தின் தொடக்கத்திலிருந்து இதுவரை 10% வளர்ச்சி கண்டுள்ளது.
சாம்கோ செக்யூரிட்டீஸின் ஆய்வாளர் திவ்யம் மோர் கூறுகையில், சுஸ்லானின் ஆர்டர் புத்தகம் கடந்த ஆண்டு 2,929 மெகாவாட் இருந்து தற்போது 5,555 மெகாவாட் வரை உயர்ந்துள்ளது. இது எதிர்கால வருவாயின் மிக முக்கியமான அறிகுறி என கூறப்படுகிறது.
பங்குகளுக்கான இலக்கு விலைகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன:
மோதிலால் ஓஸ்வால்: ரூ.75 இலக்கிலிருந்து ரூ.83 ஆக உயர்த்தியது.
JM Financial: ரூ.71 லிருந்து ரூ.81 ஆக உயர்த்தியது.
ICICI Securities: வாங்கலாம் மதிப்பீட்டை தக்க வைத்தும், இலக்கை ரூ.68 லிருந்து ரூ.76 ஆக உயர்த்தியது.
4.5 ஜிகாவாட் திறன் கொண்ட சுஸ்லான் எனர்ஜி எதிர்காலத்தில் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த தயாராக உள்ளது.



















