செய்திகள்
பொங்கல் பரிசுத் தொகுப்பு: இந்த ஆண்டு ரொக்கம் வழங்கப்படுமா? தமிழக அரசின் முடிவு என்ன?
Published
1 வருடம் agoon
By
Poovizhi
தமிழக அரசின் சார்பில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் இந்த ஆண்டும் இன்று முதல் வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும்.
இந்த திட்டம் மூலம் 2,20,94,585 குடும்பங்கள் பயன்பெறுவதுடன், இதற்கான செலவினமாக ரூ.249.76 கோடி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படுமா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டின் மழை வெள்ள பாதிப்புகளாலும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியதாலும், ரொக்கத் தொகுப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதுபற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்குவது குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார்” எனத் தெரிவித்தார். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளதால், இனி ரொக்கம் வழங்குவது சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.
எனினும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவாய்ப்புள்ளதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து விரிவான விளக்கம் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















