வணிகம்
8வது ஊதியக்குழு: ஓய்வூதியத்தில் பெரும் உயர்வு! ஓய்வூதியதாரர்கள் உற்சாகத்தில்!

மத்திய அரசின் 8வது ஊதியக்குழு செயல்படுத்தும் பணிகள் வேகமடைந்து வருகின்றன. இதில், ஓய்வூதியதாரர்களுக்கே அதிகபட்ச பலன்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான முக்கிய காரணியாக “ஃபிட்மெண்ட் ஃபாக்டர்” (Fitment Factor) அமைகிறது.
மத்திய அரசு, 2025 ஜனவரியில் 8வது ஊதியக்குழு அமைப்பதற்கான ஒப்புதல் அளித்தது. தற்போது, இந்த குழுவின் குறிப்பு விதிமுறைகள் (Terms of Reference – TOR) தயார் செய்யப்படுவதுடன், எதிர்வரும் 2–3 வாரங்களில் குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 2025 டிசம்பரில் நிறைவடைவதால், 2026 ஜனவரி முதல் 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும். குழுவின் பரிந்துரைகள் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2026 முதல் ஓய்வூதியர்களுக்கு நிலுவை தொகையாக ஊதிய உயர்வு வழங்கப்படும்.
🪙ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உயர்வால் ஏற்படும் ஓய்வூதிய மாற்றங்கள்:
1.92 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: ரூ.30,000 அடிப்படையிலான ஓய்வூதியம் – ரூ.57,600 ஆக உயரும்
2.08 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: ரூ.30,000 → ரூ.62,400
2.28 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: ரூ.30,000 → ரூ.68,400
2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: ரூ.30,000 → ரூ.77,100
2000 கிரேட் பேயில் ஓய்வு பெற்றவர்களுக்கான தற்போதைய ஓய்வூதியம் ரூ.13,000 ஆக உள்ள நிலையில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.28 ஆக உயர்ந்தால் ரூ.29,640 வரை கூடும் வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம், லட்சக்கணக்கான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இந்த குழு ஒரு நம்பிக்கையின் வெளிச்சத்தை தரும் வகையில் அமையும்.
















