Connect with us

இந்தியா

31 பைசா கடன் பாக்கிக்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி: நீதிபதி கண்டனம்

Published

on

Bank Loans

31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் அருகே விவசாயி ஒருவர் எஸ்பிஐ வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் அந்த நிலத்தை விற்க முடிவு செய்ததால் கடனை முழுவதுமாக திருப்பினார்.

கடன் கட்டிய பிறகு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என வங்கியிடம் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் வங்கி நிர்வாகம் இன்னும் நீங்கள் முப்பத்தி ஒரு பைசா கடன் பாக்கி வைத்து உள்ளீர்கள் என்றும், அதனை காட்டினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க முடியும் என்றும் கூறினார்.

இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது விவசாயி தன்னுடைய கடனை முழுமையாக கட்டி விட்டாலும் கம்ப்யூட்டரில் 31 பைசா கடன் பாக்கி இருப்பதாக காண்பிக்கிறது என்பதால் தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர் .

இதற்கு நீதிபதி 50 பைசாவுக்கு கீழான கடன் பாக்கியை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படை கூட உங்களுக்கு தெரியாதா? ஏன் இப்படி ஒரு விவசாயியை துன்புறுத்துகிறீர்கள் என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக வங்கி மேலாளர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு மே இரண்டாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

 

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?