இந்தியா
இந்தியாவிலேயே உ.பி-யில் தான் மிக அதிக போலி பல்கலைக்கழகங்கள்: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் மொத்தம் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யூ.ஜி.சி அமைப்புத் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி செய்து உள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களை அடுத்து, நடந்த விசாரணையில் நாட்டில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று தெரிய வந்துள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இருப்பதிலேயே மிக அதிகமாக 8 பல்கலைக்கழகங்கள் போலியாக இயங்கி வருகின்றன. டெல்லியில் மொத்தம் 7 பல்கலைக்கழகங்கள் இப்படி இயங்கி வருகின்றன. ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தலா இரண்டு முறையற்றப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேலும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகம் முறையற்ற ரீதியில் இயங்கி வந்து உள்ளன.
இந்தப் போலி பல்கலைக்கழகங்கள் குறித்து சீக்கிரமே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குத் தெரியப்படுத்தப்படும். அவர்கள் அந்த கல்வி நிறுவனங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று கூறியுள்ளார்.