தமிழ்நாடு
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு எப்போது: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு எப்போது என்பது குறித்து அரசு தேர்வு துறை இயக்ககம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக செய்முறைத் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை இயக்கம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்த வேண்டும் என்றும் அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே மாதம் 4 ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாவட்ட அரசு உதவி இயக்குனரிடம் முதன்மை கல்வி அலுவலர்கள் மே 14-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் பள்ளிகள் அனைத்து திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்த கட்டமாக செய்முறை தேர்வு மற்றும் பொது தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.