Connect with us

உலகம்

ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு… சி.இ.ஓவுக்கு ஒரு மில்லியன் சம்பள உயர்வு..வங்கியின் பாரபட்சம்..!

Published

on

ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து விட்டு அதற்கு பதிலாக CEOக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பளத்தை உயர்த்தி உள்ள வங்கியின் நடவடிக்கையால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக வேலை நீக்க நடவடிக்கை, சம்பள குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய வங்கியான யுபிஎஸ் குழுமம் சமீபத்தில் எடுத்த நடவடிக்கை காரணமாக கடும் அதிருப்தியை பெற்று வருகிறது.

இந்த வங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊழியர்களின் போனசை 10% குறைத்தது. இந்த நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த வங்கியின் சி.இ.ஓ ரால்ப் ஹேமர் என்பவருக்கு சம்பள உயர்வை அளித்துள்ளது. இதற்கு முன்னர் அவர் 11 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கு 12 மில்லியன் டாலர் சம்பள உயர்வு என அறிவித்துள்ளது. முந்தைய ஊதியத்திலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான சம்பள உயர்வு சிஇஓவுக்கு இந்த வங்கி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கஷ்டப்பட்டு வேலை செய்யும் ஊழியர்களுக்கு 10% போனஸை குறைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஊழியர்களுக்கு போனஸ் ஆக 3.3 பில்லியன் டாலர் ஒதுக்கிய நிலையில் இந்த ஆண்டு சுமார் 10 சதவீதம் குறைத்து போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்விட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய வங்கியான யுபிஎஸ் வங்கி கடந்த சில மாதங்களாகவே சீரற்ற முறையில் இயங்கி வருவதாகவும் நிதி திரட்டுதல், மூலதனம் திரட்டுதல் ஆகியவற்றில் சுமார் 50% சரிவை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வர்த்தகத்தில் ஆதாயம் மற்றும் நிர்வாகத்தில் உள்ள வரவு செலவு ஆகியவற்றை ஈடு கட்டுவதற்காக இந்த வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அதில் ஒன்றுதான் போனஸ் குறைப்பு நடவடிக்கை என சமீபத்தில் அதன் சிஇஓ ஹோமர் அறிவித்திருந்தார்.

ஆனால் அதே நேரத்தில் செயல் திறனுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் ஆரோக்கியமான கலாச்சாரத்தையும் யூபிஎஸ் வங்கி கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதே ஸ்விட்சர்லாந்து நாட்டின் இன்னொரு வங்கியான கிரெடிட் சூசி என்ற வங்கி ஆயிரக்கணக்கான பணி நீக்க நடவடிக்கையை எடுத்த நிலையில் யூபிஎஸ் வங்கி எந்தவித பணிநீக்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் போனஸ் குறைப்பு நடவடிக்கை மட்டுமே எடுத்துள்ளது என்றும் இந்த வங்கியின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?