தமிழ்நாடு
10,11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? அதிகாரபூர்வ தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை அறிவிப்பார் என பள்ளிகல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது, இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளைய பொதுத் தேர்வு அறிவிப்பு வெளிவந்தவுடன் தேதி குறித்த தகவலைப் பார்ப்போம்.