இந்தியா
சீனா கண்டுபிடித்த அதிசய பசை – 3 நிமிடங்களில் உடைந்த எலும்பை ஒட்டி விடலாம்

சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள “சர் ரன்ரன் ஷா“ மருத்துவமனையின் எலும்பியல் நிபுணரான லின் சியான்ஃபெங் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் ”போன் 02” என்ற புதிய பசையை உருவாக்கியுள்ளனர்.
கடலுக்கு அடியில் பாறைகளில் சிப்பிகள் உறுதியாக ஒட்டிக் கொண்டிருப்பதை காணலாம். எப்போதும் உப்பு நீர் சூழ்ந்த இடத்தில் நகரும் பாறைகளில் கூட இவை வலுவாக ஒட்டியிருக்கிறதே … எப்படி? என்ற எண்ணம் உதித்தது.அதிலிருந்துதான் இந்த பசையை உருவாக்கும் ஐடியா வந்தது. என்று குறிப்பிட்டள்ளார் லின் சியான்ஃபெங்.
இந்தப் பசை இரத்தம் நிறைந்த சூழலிலும் மூன்று நிமிடங்களுக்குள் உடைந்த எலும்புகளைத் துல்லியமாக ஒட்ட வைக்கும் திறன் வாய்ந்தது. எலும்பு முழுமையாகக் குணமாகி இயல்பு நிலை அடையும் போது இந்தப் பசை இயற்கையாகவே உடலால் உறிஞ்சப்பட்டு விடும். இதனால் இனி வரும் காலங்களில் எலும்பு உடைந்தால் பிளேட் வைக்க ஒரு அறுவை சிகிச்சை மற்றும் குணமான பின் அவற்றை எடுக்க இன்னொரு அறுவை சிகிச்சை என நோயாளிகள் அல்லல் பட வேண்டியதில்லை. அதனால் ஏற்படும் தொற்று மற்றும் வேறு சில அபாயங்களும் குறையும். இதுவரை 150 நோயாளிகளிடம் இந்த பசை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனால் கால விரையத்தையும் உயிரிழப்புக்களையும் செலவையும் குறைக்க இயலும் என மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் தெரிவிக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள்.
சில ஆண்டுகள் போனால் quickfix போல 10 ரூபாய் பாக்கெட்டுகளில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
















