Connect with us

இந்தியா

வாக்குத் தவறிய வளர்ந்த நாடுகள் – வாகனப்புகை கட்டுப்படுத்தலில் கடும் பின்னடைவு

Published

on

பெட்ரோலில் ஓடும் வாகனங்களுக்கு விரைவில் முடிவு கட்டப்போவதாகக் கூறி கைத்தட்டல்களைப் பெற்ற ஐரோப்பிய ஒன்றியம் இப்போது அதிலிருந்து சற்றே பின்வாங்கியிருப்பது தற்போது பேசுபொரளாகி வருகிறது.

2035ல் தங்கள் நாடுகளில் ஓடும் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு முழுத்தடை விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் ஆர்ப்பாட்டமாக அறிவித்தது.

சுற்றுச்சூழல் மாசுபாடுகளைத் தவிர்க்கும் நோக்கத்திலும் பெட்ரோலிய இறக்குமதியினால் ஏற்படும் நிதிச்சுமையிலிருந்து மீளவும் பல நாடுகளும் மின்சார வாகனங்களுக்கு தங்கள் முழு ஒத்துழைப்பைக் கொடுத்து வரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இப்படி யுடர்ன் அடித்திருப்பதற்கு  என்ன காரணம்?

நம்பிக்கை அளித்த ஜாம்பவான்கள்

அமெரிக்காவில் டெக்சாஸைத் தலைமையிடமாகக் கொண்ட எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தனது முதன்மைத் தயாரிப்பு மின்சார வாகனங்களே என்று கூறி மும்முரமாக ஈடுபட்டது. ஆடி, போர்சே, ஸ்கோடா போன்ற வாகனங்களின் உற்பத்தி கேந்திரமான ஜெர்மனியைச் சேர்ந்த போகஸ்வேகன் நிறுவனம் 2030ல் ஐரோப்பாவில் தாங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்களில் 75 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாகவே இருக்கும் என்று அறிவித்தது.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டெர்லாண்டிஸ் நிறுவனம் வருங்காலத்தில் 100 சதவீதம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து சாலைகளுக்கு அனுப்பப் போவதாக சத்தியமே செய்து கொடுத்தது.

அமெரிக்காவில் தற்போது விற்பனையாகும் வாகனங்களில் பத்தில் ஒரு பங்குதான் மின்சார வாகனங்களாக இருக்கிறது. எனினும் செவர்லே, ஜிஎம்ஸி, காடிலாக் போன்ற பிரபல பிராண்ட் கார்களை தயாரிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உடனடியாக இல்லையென்றாலும் 2035ல் முழுக்க மின்சார வாகனங்களுக்கு மாறிவிடப் போவதாக கூறியிருந்தது.

உறுதிமொழிகள் காற்றில் கரைந்தது ஏன்?

மின்சார வாகன உற்பத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்ட ஈடுபாடு முடிவுக்கு வந்து விட்டது போல் தெரிகிறது. பல முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்கும் அவர் எலான் மஸ்கின் மீது கொண்ட திடீர் பகைமை காரணமாக அவரது டெஸ்லா நிறுவனத்தை குறி வைக்கும் நோக்கில் மின்சார வாகனங்களுக்கு அளித்த வரிவிலக்கு மானியம் போன்றவற்றை பெருமளவில் குறைத்துக் கொண்டார். இதனால் அமெரிக்காவில் மின் வாகனங்களில் முனைப்ப காட்டுவது இப்போதைக்கு கலிபோர்னியா போன்ற சில மாகாணங்கள்தான்.

இந்த நிலையில்தான் இப்போது ஐரோப்பிய ஒன்றியம் வருங்காலத்தில் முழுக்க முழுக்க பெட்ரோல் வாகனங்களுக்க தடை விதிப்பது சாத்தியமா எனத் தெரியவில்லை என்று கூறுகிறது. மாறாக பெட்ரோலிய வாகனங்களிலிருந்து வரும் நச்சுக்காற்றின் அளவைக் கணிசமாக  குறைக்க தேவையான சட்டங்கள் இயற்றப்படும் என்று கூறிவருகிறது.

குறிப்பாக ஜெர்மனியும் இத்தாலியும் பெட்ரோலிய வாகனங்களுக்கு தடை என்பதை முதலிலிருந்தே முழு மனதோடு ஏற்கவில்லை.

பாதிப்புகள்

மூச்சு முட்டும் நச்சுப் புகை காரணமாகடெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு மோலான டீசல் வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டு புதிய விதி அறிமகமானது. தெருக்களின் தூசியைக் கட்டுப்படுத்த கட்டிடப் பணிகளுக்க கடும் கட்டுப்பாடுகள் பொண்டு வரப்பட்டன. ஆனால் இவையெல்லாம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

இந்த வாகன புகையிலிருந்து கரியமிலவாயு மற்றும் நைட்சிக் ஆக்சைடு ஆகியவை அதிகரிக்கும். குறிப்பாக பிஎம் 2.5 அளவுக்கு தூசு துகள்கள் அதிகரிப்பது மேலும் ஆபத்தை விளைவிக்கும். 2.5 மைக்ரோமீட்டரை விடக் குறைவான விட்டம் கொண்ட நுண்துகள்கள் அதிகரிப்பது நேரடியாக நுரையீரலை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை நம உடலில் ஆஸ்துமா,இதய பாதிப்பு ரத்தச் சர்க்கரை மோசமான அளவைத்தாண்டுதல் போன்ற ஆபத்துக்களை உண்டாக்கலாம்.

சார்ஜிங் ஸ்டேஷன்கள் பரவலாக இல்லாதாதால் மின்சார வாகனங்களின் பயன்பாடு எதிர்பார்த்த அளவுக்கு வேகமடையவில்லை.

சீன சவால்

சீனாவில் விலை குறைந்த மின்சார வாகனங்களும்  பிற வாகனங்களும் தயார்க்கப்படுவதால் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே லித்தியம், சோடியம் அயான் பாட்டரிகளைதயாரிப்பதில் சீனா முன்னணியில் இருப்பதையம் மனதில் கொள்ள வேண்டும்.

காரணம் எதுவாக இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை இந்த விஷயத்தில் வாக்கு தவறியிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு அவநம்பிகையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்ட பிரிடடன் மட்டும் 2030ல் பெட்ரோல் டீசலில் ஓடும் எந்த காரும் புதிதாக விற்பனை செய்யப்படாது என்று கூறியிருப்பது ஒரு சிறு ஆறுதல்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்4 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா7 நாட்கள் ago

சாத்தான்குளம் இரட்டை தூக்கு தண்டனை வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரனை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

Translate »
Na co si dát pozor při porodu ?. Qual è il tema centrale di fat choi (发财) ?. Rejestr suplementów diety.