Connect with us

ஆரோக்கியம்

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

Published

on

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட “டெக்சாமெதாசோன்“ ஊசி மருந்தால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்ததாகவும் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு அதன் உற்பத்தி தரத்தை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கடந்த ஏப்ரலில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மட்டும் 4000 டெக்சாமெதாசோன் குப்பிகள் வழங்கப்பட்டன. அதில் 3500க்கும் மேற்பட்ட மருந்துகள் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில் சுமார் 300 மருந்துகள் கையிருப்பில் உள்ளன. ஒவ்வாமை, அழற்சி போன்ற பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சையின் போதும் அதற்கு பின்னரும் “டெக்சாமெதாசோன்“ மருந்து வழங்கப்படுகிறது. ஆனால் திருச்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது குறிப்பிட்ட உற்பத்தி தொகுதி (பேட்ச்) மருந்து செலுத்தப்பட்ட மூன்று நோயாளிகளுக்கு கடுமையான இதய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக டேக்கி அரித்மியா எனப்படும் அதிவேக இதயத்துடிப்பு, கார்டியோ மயோபதி எனப்படும் இதயத்தசை தளர்வு கடுமையான இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு கார்டியோஜெனிக் ஷாக் எனப்படும் இதயச் செயலிழப்பால் ஏற்படும் அதிர்ச்சி நிலை ஆகியவை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளன.

கடந்த மே 22ம் தேதி மூக்கு சதை சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 20 வயதான மூன்றாம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவிக்கும் இந்த டெக்சாமெதாசோன் மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. அதன்பிறகே இதய பாதிப்புக்கள் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை ஒரு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவினர் ஆய்வு செய்து அரசிடம் அளித்த ஆய்வறிக்கையில் “டெக்சாமெதாசோன்“ மருந்து அந்த பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மருந்தின் தரத்தை ஆய்வு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனிடையே குறிப்பிட்ட உற்பத்தி தொகுப்பைச் சேர்ந்த (கிஎச்ஐ-60004) டெக்சாமெதாசோன் 8 எம்.ஜி மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டு அவற்றை அரசு மருத்துவமனைகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர். அவை கிண்டியில் உள்ள கிங் நோய்த் தடுப்பு மற்றம் ஆரய்ச்சி நிலையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த மே 29ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் எஸ்.குமரவேல் மருத்துவக் கல்வி மற்றம் ஆரய்ச்சி இயக்குநரகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் “டெக்சாமெதாசோன்“ மருந்தின் கடுமையான பக்க விளைவுகளைக் குறித்துக் குறிப்பிட்டிருந்ததுடன் உடனடியாக மருந்துப் பகுப்பாய்வு செய்து உரிய தடுப்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இது குறித்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் “மாநிலத்திலுள்ள வேறு எந்த மருத்துவமனையிலும் இதுபோன்ற பக்க விளைவு புகார்கள் இதுவரை வரவில்லை. எனினும் திருச்சியில் புகார் எழுந்த உடனேயே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட தொகுதி மருந்துகளை பயன்படுத்த தடை விதித்துள்ளோம். அதன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பிறகே இந்த சந்தேகங்கள் உண்மையா என்பது தெரியவரும்“ என்றார்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா6 மணி நேரங்கள் ago

அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

வணிகம்7 மணி நேரங்கள் ago

AI, Space Tech பங்குகளில் சரிவு: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

செய்திகள்10 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்10 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்11 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா7 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா7 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா7 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.