தமிழ்நாடு
இந்தி தெரியாவிட்டால் பணம் வாபஸ் கிடையாது: ஜொமட்டோவின் சர்ச்சை பதில்!

இந்தி தெரியாத வாடிக்கையாளருக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது என ஜொமட்டோ நிறுவனத்தின் கஸ்டமர்கேர் கூறிய தகவல் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையை சேர்ந்த விகாஸ் என்பவர் சமீபத்தில் ஜொமட்டோ உணவு வழங்கும் நிறுவனத்தில் உணவுகளை ஆர்டர் செய்தார். ஆனால் அவர் ஆர்டர் செய்த மொத்த உணவுகளும் வராமல் ஒரு சில உணவுகள் டெலிவரி செய்யப்படவில்லை என தெரிகிறது.
இதனையடுத்து அவர் கஸ்டமர் கேரில் பேசியபோது இந்தியில் மட்டுமே பதில் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் கஸ்டமர் கேருக்கு சாட் செய்து தனது பிரச்சனையை கூறியுள்ளார்.
இந்த நிலையில் நீங்கள் ஹிந்தியில் உங்கள் பிரச்சனையை தெளிவாக விளக்கவில்லை. அதனால் உங்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது என்று கூறியதோடு, ஒரு இந்தியனாக இருந்து கொண்டு தேசிய மொழியான இந்தியை கற்று கொள்ளாமல் ஏன் உள்ளீர்கள் என கஸ்டமர் கேரில் இருந்து பதில் வந்ததாக தெரிகிறது.
இது குறித்து தனது ஆதங்கத்தை விகாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜொமைட்டோ நிறுவனத்தின் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் ஜொமைட்டோ நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என்று ஏராளமானோர் விகாஸ்க்கு ஆதரவாக பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் அவர்கள் இது குறித்து கூறிய போது, ‘ஹிந்தி தேசிய மொழி என்று யார் சொன்னது? தமிழகத்தில் இருக்கும் ஒரு கஸ்டமர் ஹிந்தியை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏன்? இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என கஸ்டமர் கேர் அட்வைஸ் செய்து அதிகப்பிரசங்கித்தனம் . எனவே உடனடியாக இதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Team @zomato @zomatocare from when did Hindi become a National language.
Why should the customer in Tamil Nadu know hindi and on what grounds did you advise your customer that he should atleast know a little of Hindi.
Kindly address your customer's problem and apologize. https://t.co/KLYW7kRVXT
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) October 18, 2021





















