இந்தியா
த.வெ.க.தலைவர் விஜய்க்கு அப்படி என்ன பெரிய அச்சுறுத்தல்? தலைவர்கள் சரமாரி கேள்வி…

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தமிழக வெற்றிக் கழக தலைவர் வியக்க்கு இன்று முதல் ‘Y’ ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
அவருக்கு அப்படி என்ன பெரிய அளவில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது?. இன்னமும் வீட்டை விட்டு வெளியில் வராமல் அரசியல் செய்து வருபவருக்கு இந்த பாதுகாப்பு அவசியம்தானா? என தவெகவுடன் கூட்டணி சேர்ந்து விடும் என பேசப்பட்டு வருகிற அதிமுக கேள்விகளை எழுப்பியுள்ளது.
விஜய் வீட்டை விட்டு வெளியே வந்து அரசியல் செய்யட்டும். ஒரு தேர்தலிலாவது நிற்கட்டும். அவருக்கு ஆதரவு எப்படி உள்ளது என்று பார்த்த பின்பே அவருடன் கூட்டணி பற்றி பரிசீலிக்கப்படும் என தேமுதிகவின் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிருக, தவெக, பாஜக, நாதக என்ற நான்கு கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் அது திமுகவிற்கு எதிரான பலமான கூட்டணியாக அமையும் என தேர்தல் வியுக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்திற்கும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கும் முதலில் வித்தியாசத்தை கற்றுக்கொண்டு அரசியல் பேசட்டும். 18 வயதிற்கு கீழுள்ளவர்கள் அரசியலிலோ தொழிலிலோ ஈடுபடக் கூடாது என்பது தெரியாத தவெக தனது கட்சியில் குழந்தைகள் அணி ஆரம்பித்து குழந்தைத் தனமாக நடந்து கொள்கின்றனர் என பாஜகவின் அண்ணாமலை பேசியுள்ளார்.
சமூக விரோத சக்திகளிடமிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கக் கூடிய நபர்கள் எத்தனையோ பேரை விட்டு விட்டு இவருக்கு இத்தகைய பாதுகாப்பு ஏன் என்று அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் வலம் வருகின்றன. இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு இந்தி நடிகையும் பார்லிமெண்ட் ராஜ்யசபா உறுப்பினருமான கங்கணா ரணாவத்துக்கும் காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படத்தின் இயக்குநர் விவேக் அக்னிவேறாத்ரிக்கும் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு குழுவில் 11 பேர் இருப்பார்கள். 2 பேர் தேசிய பாதுகாப்பு படை கமேண்டோக்கள் மற்றும் மற்றவர்கள் அந்த பாதுகாப்புக்குரிய நபர் வசிக்கும் மாநிலத்தின் காவல்துறையிலிருந்தும் நியமிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் பாஜகவின் “பி“ டீம் என்று பலரும் தவெகவை கூறி வரும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

















