Connect with us

தமிழ்நாடு

வாலிபருடன் தொடர்பு: தட்டிக்கேட்ட கணவரை அரிவாள்மனையால் வெட்டிய மனைவி!

Published

on

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 49 வயதான செல்வராகவன் என்பவர் தினக்கூலி வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி 30 வயதான சுந்தரி சில வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். செல்வராகவன் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்.

இவர் கடந்த திங்கள் கிழமை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி சுந்தரி பல மணி நேரமாக செல்போனில் ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த செல்வராகவன் இவ்வளவு நேரமாக யாரிடம் பேசிட்டு இருக்க என மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஆத்திரம் அடைந்த மனைவி அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து கணவரின் நெற்றி மற்றும் இடது கையில் வெட்டியுள்ளார். இதனையடுத்து வலியால் அலறி துடித்த செல்வராகவனை அருகில் உள்ளவர்கள் வந்து மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செல்வராகவன் தனது மனைவி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மனைவி செல்போனில் அதிக நேரம் வேறு ஒரு ஆணுடன் பேசியதாகவும், வேலை செய்யும் இடத்தில் ஒரு வாலிபருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதை தட்டிக்கேட்ட தன்னை அரிவாள்மனையால் வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?