வணிகம்
2040ல் 1 கோடி ரூபாயின் மதிப்பு எவ்வளவு? தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்!

பணவீக்கம் (Inflation) காலப்போக்கில் பணத்தின் மதிப்பை குறைத்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில தசாப்தங்களில் இந்தியாவில் சராசரி பணவீக்க விகிதம் 5% முதல் 7% வரை இருந்து வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், 2040 ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு இன்றைய அளவுக்கு சமமாக இருக்காது.
முன்னொரு காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் வைத்திருப்பவரை பணக்காரர் எனக் கருதினர். ஆனால் இன்று அந்த அளவு வெறும் அடிப்படைச் செலவுகளுக்கே போதுகிறது. இதேபோல, 2040-ல் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு எவ்வளவு குறையும் என்பதை கணக்கிட்டு பார்த்தால் அதிர்ச்சி அடைய வேண்டியிருக்கும்.
உதாரணமாக, வருடாந்திர பணவீக்கம் 6% எனக் கணித்தால், 2040-ல் ரூ.1 கோடி மதிப்பு ரூ.40 – 50 லட்சம் மட்டுமே இருக்கும். இதன் பொருள், இன்று 500 ரூபாய் மதிப்புள்ள பொருள், அடுத்த ஆண்டு அதிக விலைக்கு தான் கிடைக்கும்.
வாழ்க்கைச் செலவு, கல்விச் செலவு, சுகாதாரச் செலவு, வீட்டுவசதி முதலான துறைகளில் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. உதாரணமாக, 2025-ல் ஒரு 2 BHK வீடு ரூ.80 லட்சம் என்றால், 2040-ல் அதே வீடு 2 முதல் 3 கோடி வரை செல்லும். கல்வி மற்றும் சுகாதாரச் செலவுகளும் இரட்டிப்பாகும்.
இந்நிலையில், எதிர்கால பாதுகாப்பிற்காக முதலீடு மிகவும் அவசியமானதாகிறது. பங்குச் சந்தை, பரஸ்பர நிதி (Mutual Funds), ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற நீண்டகால முதலீடுகள் மட்டுமே பணவீக்கத்தை எதிர்கொண்டு செல்வத்தைப் பாதுகாக்க உதவும்.
ஆகையால், நிதித் திட்டமிடலை இப்போதே தொடங்கி, புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் 2040-ல் கூட நிதி சுதந்திரத்துடன் வாழ முடியும்.















