Connect with us

தமிழ்நாடு

நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் பரிதாப பலி: திருச்சி அருகே அதிர்ச்சி சம்பவம்!

Published

on

திருச்சி அருகே 2 வயது சிறுவன் நூடுல்ஸ் சாப்பிட்டதால் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிக்கன் சாப்பிட்ட ஒரு இளைஞரும், அதற்கு முன் சில நாட்களுக்கு முன்னர் ஷவர்மா சாப்பிட்ட ஒரு கல்லூரி மாணவி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 2 வயது சிறுவன் நூடுல்ஸ் சாப்பிட்டதால் திடீரென வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே சேகர் – மகாலட்சுமி தம்பதியின் 2 வயது மகன் சாய். இவர் உடல் அலர்ஜியால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுவனுக்கு அவரது தாய் மகாலட்சுமி நூடுல்ஸ் சமைத்துக் கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறுவன் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன்ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியதால் மகாலட்சுமி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?