தமிழ்நாடு
நாளை முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்: தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தவிர இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் நீக்கம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே நாளை முதல் தமிழ்நாட்டில் அரசியல் கலாச்சார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் என்ற நிபந்தனை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை அனுமதிக்கப்படும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருமணம் இறப்பு நிகழ்வு தவிர மற்ற அனைத்துக் கட்டுப்பாடுகளும் நாளை முதல் நீக்கப்பட்டு உள்ளதால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.