தமிழ்நாடு
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? முதல்வரின் கூட்டத்திற்கு பின் அதிகாரிகள் தகவல்!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து முதலமைச்சரின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 33 பேர்கள் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய பிரதேசம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பது குறித்து ஆலோசனை இன்று நடந்தது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் அந்த ஆலோசனை கூட்டம் சற்று முன் முடிவடைந்த நிலையில் ஆலோசனை கூட்டத்தின் முடிவுக்குப் பின்னர் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ஒரு சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் இது குறித்து விரிவான அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையில் என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.