Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? முதல்வரின் கூட்டத்திற்கு பின் அதிகாரிகள் தகவல்!

Published

on

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து முதலமைச்சரின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 33 பேர்கள் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மத்திய பிரதேசம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பது குறித்து ஆலோசனை இன்று நடந்தது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் அந்த ஆலோசனை கூட்டம் சற்று முன் முடிவடைந்த நிலையில் ஆலோசனை கூட்டத்தின் முடிவுக்குப் பின்னர் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஒரு சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் இது குறித்து விரிவான அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையில் என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?