வணிகம்
TCS ஊழியர்களுக்கு 4.5% – 7% சம்பள உயர்வு அறிவிப்பு!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு!
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தனது பெரும்பாலான ஊழியர்களுக்கு 4.5% முதல் 7% வரை சம்பள உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது.
நேற்று மாலையிலிருந்து TCS, ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கடிதங்களை வழங்கத் தொடங்கியது. இந்த மாதம் முதல் புதிய சம்பள அமைப்பு அமலுக்கு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் மனிதவளம் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த சம்பள உயர்வு முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக, சந்தை நிலைமைகளின் காரணமாக சம்பள உயர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், சுமார் 12,000 ஊழியர்கள் (மொத்த பணியாளர்களில் 2%) பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சம்பள உயர்வு அறிவிப்பு ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.














