வேலைவாய்ப்பு
சென்னை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அரசு வேலை: 4 காலிப் பணியிடங்கள் | ஜனவரி 20 கடைசி தேதி!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கோயில்களில் அவ்வப்போது காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ள ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
📌 பணியிடங்கள் விவரம்:
தட்டச்சர் – 1
பிளம்பர் – 1
அலுவலக உதவியாளர் – 1
மின்பணியாளர் – 1
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 ஜனவரி 2026
🎓 கல்வித் தகுதி:
தட்டச்சர்:
10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி
அரசு தொழில்நுட்ப தேர்வில் தட்டச்சு தேர்ச்சி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை / முதுநிலை தகுதி
கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கம் தொடர்பான சான்றிதழ்
பிளம்பர்:
அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் வழங்கப்பட்ட ITI / தொழிற்பயிற்சி சான்றிதழ்
அலுவலக உதவியாளர்:
8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி
மின்பணியாளர்:
அரசு / அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மின்சார தொழிற்பயிற்சி
மின்சார உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட B சான்றிதழ்
💰 சம்பளம் & வயது வரம்பு:
வயது:
01.07.2025 தேதியின்படி 18 வயது பூர்த்தி
அதிகபட்சம் 45 வயது
மாத சம்பளம்:
தட்டச்சர்: ₹15,300 – ₹48,700
பிளம்பர்: ₹12,600 – ₹39,900
அலுவலக உதவியாளர்: ₹12,600 – ₹39,900
மின்பணியாளர்: ₹12,600 – ₹39,900
📝 விண்ணப்பிப்பது எப்படி?
hrce.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்
அல்லது நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களுடன் தபால் மூலம் கோயில் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்
சேர்க்க வேண்டிய ஆவணங்கள்:
வயது சான்று
கல்வித் தகுதி சான்றிதழ்கள்
சாதி சான்றிதழ்
அனுபவ சான்று (இருந்தால்)
நன்னடத்தை சான்று
ஆதார் அட்டை
இருப்பிட சான்று
📅 விண்ணப்பம் கிடைக்க வேண்டிய கடைசி நேரம்:
20 ஜனவரி 2026 – மாலை 5.45 மணி














