Connect with us

இந்தியா

அதானி குழும செய்திகளை ஊடகங்கள் வெளியிட கூடாதா? உச்சநீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டிருப்பது என்ன?

Published

on

அதானி குழும நிறுவனங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதானி குழும நிறுவனங்கள் குறித்து ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட செய்தி காரணமாக அந்நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதானி குழுமம் மற்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க குழு அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதனை அடுத்து குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்து சீல் இடப்பட்ட உரையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் குழுவில் இடம் பெறும் உறுப்பினர்களை உச்சநீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையில் அதானி குழுமம் மற்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை அதானி குழுமம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சர்மா என்பவர் ஆஜர் ஆனார்.

hinderburg2

ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் அதானி குழுமம் தொடர்பாக செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தலைவிதிக்க வேண்டும் என்றும் ஊடகங்களின் செய்தியால் இந்த வழக்கின் மாண்பு விமர்சிக்கப்படும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்தார். ஆனால் இதை ஏற்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் ஊடகங்களுக்கு எதிராக எந்தவித தடையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய அவர் விரைவில் இந்த வழக்கை முடிக்கக்கூடிய அளவுக்கு விசாரணைகள் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து ஊடகங்கள் அதானி குழும நிறுவனங்கள் குறித்து செய்தி வெளியிட எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?