Connect with us

உலகம்

காபூலில் தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் பலி: பொறுப்பேற்ற தீவிரவாத அமைப்பு!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் நேற்று இரவு முதல் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தாலிபான் அமைப்பை எச்சரிக்கை செய்தது. ஆனால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் உள்பட மற்ற நாட்டினர்களை பத்திரமாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க படைகள் இன்னும் முழுமையாக வெளியேற வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஏற்கனவே அமெரிக்க படைகளுக்கு தீவிரவாதிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் நேற்று இரவு காபூல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகளும் காபுலில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே 2 வெடிகுண்டுகளும் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானதாகவும், அதில் ஒருவர் கடற்படை மருத்துவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பொதுமக்கள் 60 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்பதும் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைப்படை தாக்குதல் நடந்த போதிலும் பொது மக்களை வெளியேற்றும் பணியில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்க ராணுவத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஐஎஸ்ஐஎஸ் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் காபூலில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன என்பதும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது குறித்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?