தமிழ்நாடு
கோமாளித்தனம் மந்திரிகளின் ஆட்சி நடக்கிறது: ஸ்டாலின் அதிரடி!

தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது நடந்துவரும் ஆட்சியை ஊழல், கோமாளித்தனம் மந்திரிகளின் ஆட்சி என விமர்சித்துள்ளார்.
திமுக நடத்தி வரும் ஊராட்சி சபை கூட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு வருகிறார். இந்த கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வரும் ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியில் இருக்கும் பள்ளபட்டி ஊராட்சி சபைக் கூட்டத்திலும் கலந்துகொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அப்போது பேசிய அவர், ஊழல், கோமாளித்தனம் மந்திரிகளின் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. மேலும் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் ஐந்துபேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த கொலைக்கு எடப்பாடியும் உடந்தை என்று நாங்கள் சொல்லவில்லை, அதில் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு கொலைகார ஆட்சிதான் இங்கே நடக்கிறது. கூடிய விரைவில் இந்த கொலைவழக்கு மூலம் எடப்பாடியும் சிறைக்குப் போகப்போவது உறுதி என்றார்.















