கிரிக்கெட்
இந்தியா அபார பந்துவீச்சு: 227 ரன்களுக்குள் சுருண்டது தென்னாப்பிரிக்கா அணி!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்ற தென்னாப்பிரிக்கா அணியுடன் இந்தியா தனது முதல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி தென்னாப்பிரிக்கா அணியை 227 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியுள்ளது.
முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லா, டீகாக் ஜோடி களமிறங்கியது. இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அணி 11 ரன் எடுத்தபோது ஆம்லா இந்திய வேகப்புயல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மற்றொரு ஆட்டக்காரர் டீகாக்கும் விரைவில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து நடையை கட்ட ஆரம்பித்தனர்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை மட்டும் தான் எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மோரிஸ் 42 ரன்களை கடைசி நேரத்தில் அடித்தார். இல்லையென்றால் தென்னாப்பிரிக்கா அணி 200 ரன்களுக்கு உள்ளாகவே சுருண்டியிருக்கும். இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 227 ரன்களை குவிக்க இந்திய அணிக்கு 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.




















