Connect with us

சினிமா செய்திகள்

ரஜினி படத்தில் நடிக்க நிபந்தனை விதித்தாரா சிவராஜ்குமார்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 169 திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினி படத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிக்க நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அவரது தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர் .

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகயிருக்கும் ’தலைவர் 169’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க இருப்பதாகவும், ரஜினி மகளாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் வில்லனாக பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை அடுத்து சிவராஜ்குமார் ரசிகர்கள் கொந்தளித்ததாகவும் கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஒருவர் எப்படி வில்லனாக நடிக்கலாம் என்றும் செய்திகள் வெளியானது .

இந்த நிலையில் சிவராஜ்குமார் தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினி படத்தில் ஒரு காட்சியில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்தாலும் சம்மதம் என்றும், அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் தலைவர் 169 படத்தில் இடம் பெறுவதே பெரிய அதிர்ஷ்டமாக கருதுவதாக கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து வேண்டுமென்றே பத்திரிகையாளர் என்ற போர்வையில் புரளியை கிளப்பி வருபவர்களுக்கு இந்த பதில் ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.

 

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?