Connect with us

தமிழ்நாடு

பிரச்சாரத்தில் சீமான் சர்ச்சை பேச்சு: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய புகார்!

Published

on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு நிகராக மல்லுக்கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது நாம் தமிழர் கட்சி. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் SC, ST பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் புகார் அளித்துள்ளது.

#image_title

ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை தூய்மை பணிக்காக விஜயநகர பேரரசு ஆந்திராவிலிருந்து அழைத்து வந்ததாக குறிப்பிட்டார். இதனையடுத்து பூர்வகுடி தமிழர்களாக வாழ்ந்து வரும் அருந்ததியர் இன மக்களை சீமான் இழிவுபடுத்தியதாக கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அருந்ததியினர் கூட்டமைப்பு, தலித் விடுதலை இயக்கம், ஜெய் பீம், ஆதித்தமிழர் பேரவை, பகுஜன் சமாஜ், விடுதலை வேங்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் ஈரோடு காவல் கண்காணிப்பாளரை சந்தித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் விதிகளை மீறி குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்து, அவர் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்கவும், அவரது வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் வலியுறுத்தினர். மேலும் அவர் மீது SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?